முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இண்டிகோ விமானத்தில் விமானி அறைக்குள் நுழைந்த போதை பயணி செல்போனுக்கு சார்ஜ் போட சென்றாராம்

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை : இண்டிகோ விமானத்தில் விமானியின் காக்பிட் அறைக்குள் நுழைந்த போதைப் பயணியை விசாரித்த போது, தனது செல்போனுக்கு சார்ஜ் போடவே அங்கு சென்றதாக வந்த பதிலில் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து இண்டிகோ விமானத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,

மும்பையில் இருந்து கொல்கத்தாவிற்கு கடந்த 24-ம் தேதி இண்டிகோ விமானம் புறப்பட ஆயத்தமானது. அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தன் இருக்கையிலிருந்து எழுந்து நேராக விமானியின் காக்பிட் அறையை நோக்கிச் சென்றார். விமான ஊழியர்களை அலட்சியம் செய்து நேராக அறையில் நுழைந்தார். பாதுகாப்பு விதிகள் காரணமாக காக்பிட் அறைக்குள் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இவர் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அப்போது அவர் மது அருந்தி போதையில் இருந்தார்.

போலீசார் அந்த நபரை விசாரணை செய்தனர். அப்போது தன்னுடைய செல்போனுக்கு சார்ஜ் போடவே விமானிகள் அறைக்குச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் சற்றே அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை விடுவித்தனர். விமானத்தில் பைலட் அறைக்குள் சென்று இடையூறு செய்த விமானி இறக்கி விடப்பட்ட பிறகு சற்று நேர தாமதத்திற்குப் பின் விமானம் மும்பைக்குச் சென்றது. இவ்வாறு இண்டிகோ விமான செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து