முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

"வர்மா" படத்தில் எனக்கு உயிர் கொடுத்திருக்கிறார் டைரக்டர் பாலா: இளம் நாயகன் துருவ் பெருமிதம்

சனிக்கிழமை, 29 செப்டம்பர் 2018      சினிமா
Image Unavailable

Source: provided

சேது படத்தில் எனது தந்தை ‘சீயான்’ விக்ரமின் நடிப்புக்கு இயக்குனர் பாலா உயிர் கொடுத்து இருந்தார். அதே போல வர்மா படத்தில் எனது நடிப்புக்கு அவர் உயிர் கொடுத்து இருக்கிறார். இந்த படத்தை பாலா இயக்காமல் இருந்திருந்தால் நான் நடிக்கவே வந்து இருக்க மாட்டேன்” என்றார் இளம் நாயகன் துருவ்.

விக்ரம் மகன் துருவ், ‘வர்மா’ படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இந்த படத்தை பாலா இயக்கி உள்ளார். கதாநாயகியாக மேகா நடித்துள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வசூல் சாதனை நிகழ்த்திய ‘அர்ஜுன்ரெட்டி’ படத்தின் தமிழ் பதிப்பாக ‘வர்மா’ உருவாகி உள்ளது.

இதன் படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது.இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு மகனை கதாநாயகனாக அறிமுகம் செய்து பேசினார். அவர் கூறும்போது, “இயக்குனர் பாலா தனது படங்களில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.

அவரது இயக்கத்தில் எனது மகன் துருவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன்” என்றார்.துருவ் பேசும்போது, “நான் நிறைய தமிழ் படங்கள் பார்ப்பேன். குறிப்பாக எனது தந்தை விக்ரம் நடிக்கும் படங்களை இரண்டு மூன்று தடவை கூட பார்ப்பது உண்டு. எனது தந்தைக்கு நான் தீவிர ரசிகன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து