முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி ரத்த நன்கொடையில் முதலிடம்

திங்கட்கிழமை, 1 அக்டோபர் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,- தென் மாவட்ட அளவில் உள்ள கல்லூரிகளிலேயே திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரி அதிக அளவு ரத்ததானம் வழங்கி பரிசினை பெற்றுள்ளது.
தேசிய தன்னார்வ ரத்த நன்கொடை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இந்திய மருத்துவ கழகம், இந்திய செஞ்சிலுவை சங்கம், மதுரை மீனாட்சி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் இணைந்டு நடத்திய தேசிய தன்னார்வ ரத்த நன்கொடை தினத்தில் ரத்த தன்னார்வ நன்கொடையாளர்கள் மற்றும் அமைப்புகள் கௌரவிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தென் மாவட்டங்களில் உள்ள 130 கல்லூரிகளிலேயே திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி அதிக அளவில் 390 யூனிட்டுகள் ரத்த நன்கொடை வழங்கி முதலிடம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. பரிசினை கல்லூரி முதல்வர் மகேந்திரன் நடிகர் சண்முகராஜனிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து