முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப் - கிம் இடையே 2-வது சந்திப்பு விரைவில் நடைபெறும் அமெரிக்க அமைச்சர் நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 7 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,தனது ஆசிய சுற்றுப் பயணத்தின் மூலம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உனுக்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பை விரைவில் நடைபெற செய்ய முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மைக்கேல் பாம்போயோ, முதலாவதாக நேற்று முன்தினம் ஜப்பான் வந்தடைந்தார். அங்கு அந்த நாட்டுப் பிரதமர் ஷென்úஸா அபே மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜப்பானைத் தொடர்ந்து  வட கொரியா செல்லும் அவர், தலைநகர் பியாங்கியோங்கில் அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங்-உனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அந்தப் பேச்சுவார்த்தையில், கிம் ஜோங்குக்கும், அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் இடையிலான இரண்டாவது சந்திப்புக்கான சூழலில் முன்னேற்றம் ஏற்படும் என்று பாம்பேயோ நம்பிக்கை தெரிவித்தார்.
சமாதான முன்முயற்சிகளுக்குப் பிறகு, அதிபர் கிம் ஜோங்-உனை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ சந்திக்கவிருப்பது, இது 4-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து