முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை கோவில் தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் தீவிரமடையும் போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 7 அக்டோபர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம்,கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு, ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பல்வேறு இடங்களில் பெண்கள் உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் கோட்டயம் மற்றும் சங்கனாச்சேரியில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இதன் ஒரு பகுதியாக ஆரண்மூலாவில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் வீட்டை முற்றுகையிட்டு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. சபரிமலை அய்யப்பன் கோயில் ஐதீகத்தையும், சம்பிரதாயத்தையும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முறையாக எடுத்துரைக்கவில்லை என அந்த அமைப்புகள் குற்றம் சாட்டின. முற்றுகையில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லேசான தடியடி நடத்தி போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து