முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலையில் கத்தி குத்தப்பட்ட நிலையில் இருந்த ரஷ்ய வாலிபருக்கு தீவிர சிகிச்சை

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

மாஸ்கோ,ரஷ்யாவின் டுனெட்ஸ்க் பகுதியில் யூரி ஜோகோவ் என்ற நபர் தலையில் கத்தி குத்தப்பட்டு நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. போலீசார் விரைந்து வந்து பார்த்த போது தலையில் கத்தி குத்தி செங்குத்தாக நின்று கொண்டிருந்தது. கத்தியை பார்த்த போலீசார் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அதனால் அவரை போலீசார் உடனடியாக அங்கிருந்த ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அந்த ஆஸ்பத்திரியில் போதிய வசதிகள் இல்லாததால் ஆபரேஷன் செய்து கத்தியை வெளியே எடுக்க டாக்டர்கள் யாரும் முன்வரவில்லை. அதனால் பெரிய நகரம் ஒன்றிலிருந்து ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் வரவழைக்கப்பட்டார்கள். பிறகு டாக்டர்கள் எல்லோரும் சேர்ந்து அந்த கத்தியை பத்திரமாக வெளியே எடுத்தனர். இருந்தாலும்  அவருக்கு கத்தி குத்தின இடத்தில் கண்டிப்பாக செப்டிக் ஆகுமாம். அதனால் அங்கேயே அவர் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து