முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷார்ஜாவில் வரும் 31-ம் தேதி உலக புத்தக திருவிழா நடக்கிறது

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

ஷார்ஜா,ஷார்ஜாவில் வரும் 31-ம் தேதி உலக புத்தகத் திருவிழா நடக்கிறதுஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் உலக புத்தகத் திருவிழா கடந்த 37 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தப் புத்தகத் திருவிழாவில் முதல்முறையாக தமிழ் புத்தகங்கள் இந்த ஆண்டு இடம்பெறுகின்றன. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.

இந்த அரங்குகளில் தமிழின் முப்பது முன்னணி பதிப்பகங்கள் ஒன்றிணைந்து தங்களது புத்தகங்களைக் காட்சிப்படுத்தவுள்ளன. இதில் எழுத்தாளர் பெருமாள் முருகன், கவிஞர் கனிமொழி, நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்கவுள்ளனர். சங்க இலங்கியம் முதல் நவீன இலக்கியம் வரை ஆயிரக்கணக்கான முக்கிய நூல்கள் இடம் பெறுகின்றன. வரலாறு, அறிவியல், சமூகம், பண்பாடு, மருத்துவம், கலைகள் எனப் பல்வேறு துறைகள் சார்ந்த நூல்கள் விற்பனைக்கு கிடைக்கும். அமீரகத்திலுள்ள தமிழ்ச் சங்கங்கள், இலக்கிய அமைப்புகள், ஊடகங்கள் இதற்கு பெரும் ஆதரவு அளித்துள்ளன. வரும் நவம்பர் 10-ஆம் தேதி வரை இந்தப் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து