முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் பெண்கள் அனுமதி: சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் சங்கம் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. சபரிமலை கோவிலுக்கு செல்லும் உரிமை அனைத்து வயது பெண்களுக்கும் உள்ளது என சுப்ரீம் கோர்ட் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஷைலஜா விஜயன் சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில்:சபரிமலையில் பெண்களை அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்தவர்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல. எனவே அவர்கள் மனு மீது விசாரணை நடத்தி தீர்ப்பு தர வேண்டிய அவசியம் இல்லை. கோயில் சம்பிரதாயங்கள் தொடர்பாக முறையிடுவதற்கு பக்தர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது. சபரிமலை கோயிலில் பல ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்து உள்ளது. மத நம்பிக்கை விவகாரங்களில் அரசியல் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது பக்தர்களின் தரப்பை கேட்கவில்லை. பக்தர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிடப்பட்டது. ஆனால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டது. பட்டியலிடப்பட்டு வழக்கமான நடைமுறையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவி்த்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து