முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் சோகம்: சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் பரிதாப பலி

வெள்ளிக்கிழமை, 12 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

கராச்சி, பாகிஸ்தானின் சுக்கூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமிகள் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.

பாகிஸ்தானின் சுக்கூர் மாவட்டத்தில் உள்ளது குலாம் சர்வார் ஷம்பானி கிராமம். அந்த கிராமத்தில் உள்ள மண் வீட்டின் அருகில் 4 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த மண் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார், சுவர் இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்டனர். இந்த விபத்தில் 7 பெண் குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 2 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 குழந்தைகள் பலியானது பாகிஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து