முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் விமானம் தயாரிக்கும் நிறுவனத்தை பார்வையிட்டார் நிர்மலா சீதாராமன்

சனிக்கிழமை, 13 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

பாரீஸ் : பிரான்ஸ் நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரபேல் போர் விமானங்களைத் தயாரிக்கும் டிசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சென்று பார்வையிட்டார்.

போர் விமானங்களின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அப்போது அவர் கேட்டறிந்தார். நிர்மலா சீதாராமனுக்கு அதுதொடர்பான விளக்கங்களை அளித்த டிசால்ட் ஏவியேஷன் நிறுவன அதிகாரிகள், போர் விமான தயாரிப்புப் பணிகள் தற்போது எந்த நிலையில் உள்ளன? என்பது குறித்தும் விவரித்தனர்.
அதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் ஆலையையும், முக்கியப் பகுதிகளையும் அவர் சுற்றிப் பார்த்தார். அவருடன் இந்திய - ரஷிய அதிகாரிகள் இருந்தனர்.

3 நாள் அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள நிர்மலா சீதாராமன், வியாழக்கிழமை பாரிசுக்கு சென்றடைந்தார். அதன் பின்னர் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ப்ளோரன்ஸ் பார்லியை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு அமைச்சர்களும் விரிவாகக் கலந்துரையாடினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து