முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி மாலத்தீவு தேர்தல் அதிகாரிகள் 4 பேர் இலங்கை தப்பியோட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 14 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு, மாலத்தீவில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள அதிபர் அப்துல்லா யாமீனால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அந்த நாட்டுத் தேர்தல் ஆணையக் குழுவைச் சேர்ந்த 4 அதிகாரிகள் இலங்கைக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, 5 உறுப்பினர்களைக் கொண்ட மாலத்தீவின் தேர்தல் ஆணையக் குழுவில் தற்போது ஒருவர் மட்டுமே எஞ்சியுள்ளார். இலங்கை சென்றுள்ள 4 அதிகாரிகளில் 3 பேர், தலைநகர் கொழும்பில் தங்கியுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அந்த நான்கு பேரில் பெயர் வெளியிட விரும்பாத ஓர் அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

மாலத்தீவு அதிபர் தேர்தல் தொடர்பாக, எங்களுக்கு மிரட்டல்கள் வந்ததால் அங்கிருந்து தப்பி வந்துள்ளோம். அந்த நாட்டில் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். மாலத்தீவில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. அந்தத் தேர்தலில் இரண்டாவது முறையாக அதிபர் முகமது யாமீன் போட்டியிட்டார். தேர்தலுக்கு முன்னரே தனது அரசியல் எதிரிகளை பல்வேறு வழக்குகளில் சிக்க வைத்து சிறையில் அடைத்துள்ளதால், அந்தத் தேர்தலில் அதிபர் யாமீன் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் எதிர்க்கட்சிக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட இப்ராஹிம் முகமது சோலீ தேர்தலில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. எனினும், தனது பதவியில் தொடர்ந்து நீடிக்க அதிபர் அப்துல்லா யாமீன் திட்டமிட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் அச்சம் தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில், அதிபர் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாகவும், எனவே அந்தத் தேர்தல் முடிவுகளை செல்லாததாக அறிவிக்கும்படியும் கோரி உச்ச நீதிமன்றத்தில் அதிபர் யாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் இலங்கை தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து