முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்கேரியாவில் பெண் பத்திரிகையாளர் கொலை

திங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

ஷோபியா : பல்கேரியாவில், பெண் பத்திரிகையாளர் விக்டோரியா மாரினோவா பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் ஐரோப்பா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரூஸ் நகரின் டி.வி.என். எனும் செய்தித் தொலைக்காட்சியின் இயக்குநராகப் பணிபுரிந்த விக்டோரியா, ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் நிதியில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாகச் செய்திகள் வெளியிட்டு வந்தவர். மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒரு பத்திரிகையாளர் குரல் ஒடுக்கப்படும் போது, அந்த நாடே வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது என்ற குரல் ஒலிக்கிறது. ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் இது குறித்த கவலை வெளிப்பட்டது. பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு ஐநா சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தேரஸும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து