முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெற்காசிய ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவால் அச்சுறுத்தல்: பாகிஸ்தான் அதிபர் அபாண்ட குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், தெற்காசியாவின் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி குற்றம்சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் சர்வதேச ஆயுதப் பரவல் தடுப்பு - சவால்களும், பொறுப்புகளும் என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு  நடைபெற்றது. அதில் இந்தியா குறித்து அதிபர் ஆரிப் அல்வி பேசியதாவது:-

தெற்காசிய பிராந்தியத்தில் நீண்டகாலத்தில் பாதுகாப்பு தொடர்பாக ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்தியா தனது ராணுவத்தில் பேரழிவு ஆயுதங்களை தொடர்ந்து சேர்த்து வருகிறது. இது தெற்காசியப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதே நேரத்தில் தனது ஒருங்கிணைப் பகுதிகளை பாதுகாப்பதிலும், இறையாண்மையை காப்பதிலும் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து