Idhayam Matrimony

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

மேட்டூர் : மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 13 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்ததால், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு இம் மாதம் 5-ஆம் தேதி நொடிக்கு 1,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது. பின்னர், டெல்டா பாசனப் பகுதிகளில் மழை குறைந்ததால், பாசனத் தேவை அதிகரித்தது. இதனால் 10-ஆம் தேதி காலை முதல் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது.

திங்கள்கிழமை காலை முதல் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 13 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணைக்கு நொடிக்கு 7,644 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 103.82 அடியாகவும், நீர் இருப்பு 69.88 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து