முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரதமாநதி அணையில் இருந்து 22-ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : திண்டுக்கல் மாவட்டம் வரதமாநதி அணையில் இருந்து வரும் 22-ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், வரதமாநதி அணையிலிருந்து,  பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி            மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண்              பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, வரதமாநதி அணையிலிருந்து   பாசன நிலங்களின் முதல் போக சாகுபடிக்கு 22.10.2018 முதல் தண்ணீர்  திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்திலுள்ள 5523.18 ஏக்கர்  நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து