முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகாசி வருகை தரும் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு பிரம்மாண்ட வரவேற்பு விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

செவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர்-  சிவகாசியில் வருகிற அக்டோபர் 20ம் தேதி அன்று நடைபெறவிருக்கும் பொதுக்கூட்ட்த்தில் பங்குபெறவிருக்கும் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், துணைமுதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு விருதுநகர் மாவட்டக்கழகத்தின் சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க மாவட்டக்கழகச் செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற மாவட்ட  நிர்வாகிகள் கூட்ட்த்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:
              “ அ.இ.அ.தி.முகழகம் துவக்கப்பட்டு 46 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதைகழக அமைப்புகள் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிகப்பிரம்மாண்டமாகக் கொண்டாட கட்சித்தலைமை முடிவு செய்துள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் பொதுக்கூட்டங்களை நடத்தி கழக அரசின் சாதனைகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர். அதன் படி வருகிற அக்டோபர் 20 ம் தேதி அன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விருதுநகாங மாவட்ட கழகம் சார்பாக நடைபெறவிருக்கும் பிரம்மாண்டமான கழகப் பொதுக்கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணைமுதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
                இந்த நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நட்த்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் விருதுநகரில் மாவட்டக் கழகச் செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுக்கூட்ட்த்தில் பங்குபெற சிவகாசி வருகை தரும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆவின் அருகே பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் சிவகாசியில் அவர் பங்குபெறவிருக்கும் பொதுக்கூட்ட்த்தை மாநாடு போல நடத்துவதற்கு மாவட்டம் முழுவதும் உள்ள தொண்டர்கள் திரளாக பங்குபெற முடிவு செய்யப்பட்ட்து. இது குறித்து மாவட்டக்கழக செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
               “ விருதுநகர் மாவட்டம் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் தலைமையை ஏற்றுச் செயல்படுகின்ற தீரர்கள் நிறைந்த மாவட்டமாகும். கழகமும், கழகத்தின் சின்னமான இரட்டை இலையும் எங்கு இருக்கின்றதோ அங்கு இருக்கின்ற தொண்டர்கள் நிறைந்த எக்கு கோட்டை விருதுநகர் மாவட்டமாகும். மருது சகோதரர்களைப் போல கழகத்தைக் கட்டிக்காக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையை ஏற்று கழகத்தை வலிவும், பொலிவும் மிக்கதாக மாற்றுவதற்கு அயராது பாடுபட்டு வரும் சிப்பாய்கள் நிறைந்த இந்த மாவட்டத்துக்கு வருகை தரவிருக்கும் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணைமுதலமைச்சரான அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பங்குபெறவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்கூட்டத்துக்கு பிரம்மாண்டமான ஏற்பாடுகளை மாவட்டக்கழகம் செய்து வருகின்றது. இக்கூட்ட்த்தில் கழகத்தின் அனைத்துப் பிரிவு நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.          
         இக்கூட்ட்த்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.சந்திரபிரபாமுத்தையா, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்,   மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பி.பி.செல்வசுப்பிரமணியராஜா, மாவட்ட அவைத்தலைவர் ஆமத்தூர் ஆர்.விஜயகுமார். மாவட்ட இணைச்செயலாளர் ரமாதேவிகுருசாமி, மாவட்ட துணைச்செயலாளர் வசந்திமான்ராஜ்,  மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் கா.இரவிச்சந்திரன்,மாவட்ட ஆவின் சேர்மன் பா.கண்ணன், மாவட்ட அச்சக்கூட்டுறவு சங்கத்தலைவர் பூலாங்கால் சித்திக்,  நகரச்செயலாளர்கள் இராஜபாளையம் என்.பாஸ்கரன், சிவகாசி கே.ஏ.ஏ.அசன்பத்ருதீன், திருத்தங்கல் பொன்சக்திவேல், விருதுநகர் முகமதுநயினார். சாத்தூர் என்.எஸ்.வாசன், அருப்புக்கோட்டை எம்.கண்ணன், ஒன்றியச்செயலாளர்கள் இராஜபாளையம் மேற்கு ஆர்..எம்.குருசாமி, கிழக்கு கே.கே.வேல்முருகன், ஸ்ரீவில்லிப்புத்தூர் எஸ்.கே.மயில்சாமி, வத்திராயிருப்பு எஸ்.சுப்புராஜ், வெம்பக்கோட்டை இராமராஜ், சாத்தூர் கிழக்கு கே.எஸ்.சண்முகக்கனி, மேற்கு வி.தேவதுரை, சிவகாசி புதுப்பட்டி வி.ஆர்.கருப்பசாமி, விருதுநகர் வெ.மூக்கையா, காரியாபட்டி கரியனேந்தல் ஏ.பி.ராம்மூர்த்திராஜ், திருச்சுழி எஸ்.முத்துராமலிங்கம், நரிக்குடி இ.எம்.பூமிநாதன், அருப்புக்கோட்டை எம்.சங்கரலிங்கம், பேரூரட்சி செயலாளர்கள் காரியாபட்டி வை.விஜயன், மல்லாங்கிணறு பால்சாமிநாயக்கர், செட்டியார்பட்டி எம்.அங்குதுரை, சேத்தூர் செ.செல்வக்குமார், வத்திராயிருப்பு வைகுண்டம், கொடிக்குளம் சேதுராமலிங்கம், சுந்தரபாண்டியம் எஸ்.கலுசலிங்கம், நரிக்குடி ஒன்றிய இணைச்செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், மாவட்ட கழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் முத்துப்பாண்டியன், இணைச்செயலாளர் சேதுராமானுஜம், ஒன்றிய அம்மாபேரவைச் செயலாளர் எம்.தியாகராஜன், அருப்புக்கோட்டை அம்மா பேரவைச் செயலாளர் ம.கா.சக்திவேல், எம்.ஜி.முத்துராஜா, மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை தலைவர் டி.பி.எஸ்.வெங்கடேஷ், மாவட்ட ஆவின் துணை சேர்மன் கே.கே.கண்ணன், இராஜபாளையம் அம்மா பேரவை நகரச் செயலாளர் ஏ.டி.முருகேசன், எஸ்.ஆர்.ராதாகிருஷ்ணராஜா, எஸ்.பரமசிவம், டி.வனராஜ், மாவட்ட பாசறை தலைவர் சங்கர்ராமன், சிவகாசி ஒன்றியம் வேண்டுராயபுரம் ஏ.காளிமுத்து, இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் குறிச்சியார்பட்டி மாரியப்பன், வெம்பக்கோட்டை ஒன்றியம் அழகர்சாமி, திருப்பதி, எதிர்கோட்டை மணிகண்டன், மாவட்ட அண்ணா தொழிற்சங்கப்பேரவை செயலாளர் கே.கே.பாண்டியன், மாவட்ட அமைப்புசாராஓட்டுனர் அணிச்செயலாளர் தர்மலிங்கம்,  மகளிரணி நிர்வாகிகள் சாந்தி, சரஸ்வதி சந்திரசேகரன், தனலட்சுமி, அமல்ராணிசந்திரசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து