முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலாடி அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலி

புதன்கிழமை, 17 அக்டோபர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

கடலாடி-        கடலாடி அருகே அரசு பேருந்தும்   காரும்  நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் இறந்தனர்.
   கடலாடி தாலுகா கீழச்செல்வனூர் காவல் நிலையம்  அருகே  ராமநாதபுரத்தலிருந்து தூத்துக்குடி சென்ற அரசு பேருந்தும் சிவகாசியில் இருந்து கீழக்கரை மாயகுளத்திற்கு சென்ற காரும்  நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.
  இதில் காரில் பயணம் செய்த மாயகுளம் பாரதிநகரைச்சேர்ந்த முருகேசன் மகன் அருண்(27) அதே ஊரைச்சேர்ந்த உமையசிங்கம் மகன் உமையபாலா(26)- லிங்கம் மகன் விஜயராஜா(21) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் காரில் பயணம் செய்த மாயகுளத்தைச்சேர்ந்த  ரவி மகன் கிருஷ்ணக்குமார்(23)-ராமச்சந்திரன் மகன் நவீன்(18) -சக்திவேல்மகன் உமையகணேஷ்(20)-முருகேசன் மகன் புவனேஷ்வரன்(16) மற்றும் பேருந்து ஓட்டுநர்  கிருஷ்ணன்(58) ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை இராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
   இச்சம்பவம் தொடர்பாக  முதுகுளத்தூர் டிஎஸ்பி உதயசூரியன் உத்தரவின் பேரில் சீழசசெல்வனூர் பெண் சப் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி  வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து