முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய உளவு அமைப்பு தன்னை கொல்ல திட்டமிட்டதாக சிறிசேனா கூறவில்லை - இலங்கை அரசு விளக்கம்

புதன்கிழமை, 17 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு : இந்திய உளவு அமைப்பு தன்னை கொல்ல திட்டமிட்டதாக சிறிசேனா கூறவில்லை என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.

குற்றச்சாட்டு

இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா கூறியதாக ஒரு தகவல் வெளியானது அதில்,  இந்தியா - இலங்கை இடையே குழப்பத்தை ஏற்படுத்த சில முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்திய உளவு அமைப்பான ரா  என்னை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்திய உளவு அமைப்பு மீது இலங்கை அதிபர் நேரடியாக குற்றச்சாட்டு சுமத்தும் வகையில் அவரது கருத்து அமைந்து இருந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கை மறுப்பு

இந்த நிலையில், இலங்கை அரசு தரப்பில் மேற்கூறிய தகவலுக்கு மறுப்பு வெளியாகி இருக்கிறது. இலங்கை அரசு செய்தி தொடர்பாளர் இது  பற்றி கூறும் போது, இந்திய உளவு  அமைப்பு தன்னை கொல்ல திட்டமிட்டதாக சிறிசேனா கூறவில்லை. ரா உளவாளி கைது செய்யப்பட்டதாக கூறி இரு நாடுகள்  இடையே பிரச்சினை ஏற்படுத்த முயற்சி நடப்பதாக மட்டுமே கூறினார் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமருடன் பேச்சு

இந்த விவகாரத்தில் இலங்கை அதிபர் சிறிசேனா பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது இது தொடர்பாக அவர் பிரதமர் மோடியிடம் விளக்கம் அளித்தாக தெரிகிறது. மேலும், மோடி இலங்கையின் உண்மையான நண்பர் என்று அவர் தெரிவித்தகாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து