முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்இந்தியாவுக்கு ரூ.1000 கோடி வழங்கியது மத்திய அரசு

வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : தேசிய சிறுசேமிப்பு நிதியத்தின் மூலம் மத்திய அரசு ஏர்-இந்தியா நிறுவனத்திற்கு செலுத்து மூலதனமாக ரூ.1000 கோடியை வழங்கியுள்ளது.
இது குறித்து ஏர்இந்திய நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: எண்ணெய் நிறுவனங்களுக்கு, எரிபொருள் நிலுவைத் தொகையாக ஏர்இந்தியா குழுமம் 4 ஆயிரத்து 200 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இதனால் எரிபொருள் விநியோகத்தை நிறுத்த நேரிடும் என இம்மாத தொடக்கத்தில் எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்திருந்தன.

இதையடுத்து ஏர்இந்தியா நிதிநிலையை மேம்படுத்த ரூ.2 ஆயிரத்து 121 கோடி செலுத்து மூலதனமாக அரசு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஏர்இந்தியா நிறுவனத்திற்கு தேசிய சிறுசேமிப்பு நிதியத்தின் மூலம் செலுத்து மூலதனமாக ரூ.1000 கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம், ஏர்இந்தியா நிறுவனத்தின் நிதிநிலை சற்றே மேம்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரத்தில் ரூ.500 கோடி கடனாக திரட்ட உள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து