முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் சிறுமிகளை பலாத்காரம் செய்த 20 பேர் கொண்ட குழுவுக்கு மொத்தம் 221 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சனிக்கிழமை, 20 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

லண்டன் : இங்கிலாந்தில் ஹடர்ஸ்பீல்டு நகரில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 20 பேர் கொண்ட குழுவுக்கு 221 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து ஊடகங்கள் தரப்பில், இங்கிலாந்தின் ஹடர்ஸ்பீல்டு நகரில் 2004 முதல் 7 ஆண்டுகளில் 20 பேர் கொண்ட குழு ஒன்று அப்பகுதியில் உள்ள சிறுமிகளை மது குடிக்க வைத்து பாலியல் துன்புறுத்தல் மற்றும் பலாத்காரத்துக்கு உள்ளாக்கி உள்ளது. இது தொடர்பாக 20 பேர் கொண்ட குழுவை இங்கிலாந்து போலீசார் கைது செய்தனர். அவர்களின் மீது 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக நடந்த விசாரணையில் குற்றவாளிகளின் தண்டனை நிரூப்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. தண்டனையின் முழு விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் கும்பலில் உள்ள அனைவருக்கும் மொத்தமாக 221 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆசியவாவை பூர்வீகமாகக் கொண்ட இங்கிலாந்து குடிமக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு சிறுமிகளின் குடும்பத்தார் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து