எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் : தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் அரசு எடுத்து வருகிறது என்றும், அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சேலம் மாவட்டம், ஒமலூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து எடப்பாடிக்கு செல்லும் வழியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:-
கேள்வி: சபரிமலைக்கு பெண்கள் செல்வது பற்றி ...
பதில்: அது உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு. அதில் விமர்சனத்திற்கோ, கருத்து சொல்வதற்கோ எதுவுமில்லை.
கேள்வி: மத்திய உள்துறை அமைச்சகம் கேரளா பிரச்சினையையடுத்து, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் பாதுகாப்பு கருதி ஒரு அறிக்கை அனுப்பியருப்பதாக சொல்லியிருக்கிறார்கள், எப்படிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?
பதில்: தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை. அந்த சம்பவம் நடைபெறுவதற்கு எவ்வித வாய்ப்பும் கொடுக்காத அளவிற்கு காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது.
கேள்வி: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நவம்பர் 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்திருக்கிறார்களே?
பதில்: ஏற்கனவே ஜாக்டோஜியோ அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பளக்குழு அறிவிக்கப்பட்டு ஊதியம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அவர்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகளெல்லாம் அரசால் அதற்கென்று ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆகவே, இன்றைக்கு அம்மாவினுடைய அரசைப் பொறுத்தவரை, அரசு ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. அரசைப் பொறுத்தவரைக்கும், நிதிநிலைக்கு ஏற்றவாறு, அவர்கள் வைத்த கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
கேள்வி: ஏற்கனவே இருந்த பென்சன் ஸ்கீம் வேண்டுமென்று சொல்கிறார்களே?
பதில்: அது இரண்டு மாநிலங்கள் தவிர வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.
கேள்வி: தேர்தல் வாக்குறுதியில் அம்மா இந்த மாதிரி செய்வோம் என்று சொல்லியிருக்கிறார்களே?
பதில்: நிதி ஆதாரம் இல்லையே, நிதி ஆதாரம் இருந்தால்தானே எல்லாம் கொடுக்க முடியும். தமிழகத்தின் 7-வது ஊதியக்குழு வகையில் 14,719 கோடி அதற்கு மட்டும் அரசு கூடுதலாக செலவழிக்கிறது. அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது, அகவிலைப்படியும் உயர்த்தியிருக்கிறார்கள், அதில் கிட்டத்தட்ட 1200 கோடி வழங்கப்படுகிறது. இப்படி அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது முறைப்படி அரசால் தக்க உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கேள்வி: இந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பிருக்கிறதா?
பதில்: அரசாங்கத்தின் நிதிச்சுமை குறித்து அரசு ஊழியர்களுக்கு முழுக்க முழுக்க தெரியும். ஏனென்றால், அவர்கள்தான் இந்த அரசாங்கத்தையே நடத்தக்கூடிய ஒரு நிலையில் இருக்கின்றவர்கள். அரசாங்கத்தின் நிதிநிலைமை அவர்களுக்கு நன்றாக புரியும், அதற்கு ஏற்றாற்போல் அவர்கள் ஒத்துழைப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
கேள்வி: பேச்சுவார்த்தை நடத்தப்படுமா?
பதில்: ஏற்கனவே பலமுறை அவர்களை அழைத்துப் பேசியிருக்கிறோம். அந்தத் துறையைச் சார்ந்த அமைச்சகம் மற்றும் துறைச் செயலாளர் அழைத்து பேசுவார்கள்.
கேள்வி: தமிழக முதல்வர் மட்டும் எங்களை அழைத்துப் பேசுவதில்லை என்று அவர்கள் கூறுகிறார்களே?
பதில்: கடந்த காலத்தில் சுமார் இரண்டு வருடம் வரை அதை நீட்டித்துத்தான் வழங்கினார்கள். ஆனால் நாங்கள் அப்படியல்ல. அதைப் புரிந்து, அம்மாவினுடைய அரசு அவர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் சம்பளத்தை வழங்கி வருகிறது. அவர்கள் இந்தக் கோரிக்கை வைப்பதற்கு முன்பே அவற்றை உடனே வழங்கியிருக்கிறோம்.
கேள்வி: எங்களுடைய போராட்டம் தொடரும் என்று தான் அவர்கள் சொல்லியிருக்கிறார்களே?
பதில்: நாட்டில் எல்லோருக்கும் கேட்க உரிமையுண்டு. இது ஜனநாயக நாடு, அந்த அடிப்படையில் அவர்கள் அவர்களுடைய கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.
கேள்வி: டெங்கு காய்ச்சல் அடுத்தடுத்து பரவி வருகிறதே...
பதில்: இப்பொழுது தமிழகம் முழுவதும் பருவமழை பெய்த காரணத்தினாலே தேங்கியிருக்கின்ற தண்ணீரை அந்தப் பகுதியில் இருக்கின்ற மாநகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள் அந்த நகரப் பகுதிகளிலெல்லாம் தண்ணீர் தேங்காமல் தண்ணீரை அகற்றி, டெங்கு கொசு உற்பத்தியாகாத அளவிற்கு மருந்து தெளித்தும் முன்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, அரசாங்கமே முழுவதும் செய்துவிட முடியாது, பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். நல்ல தண்ணீரில் தான் டெங்கு கொசு உற்பத்தியாகிறது. பழைய டயர், உடைந்து போன பக்கெட்டுகளில் தண்ணீர் தேங்குகிறது. அந்தத் தண்ணீரில்தான் டெங்கு கொசு உற்பத்தியாகிறது. நல்ல தண்ணீரில்தான் டெங்கு கொசு உற்பத்தியாகிறது. பொதுமக்கள் விழிப்போடு இருந்து, மழை பெய்கின்ற காலங்களிலே தங்கள் வீட்டை சுற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதை அந்த வீட்டின் உரிமையாளர் சுத்தம் செய்ய வேண்டும். எனவே, பொதுமக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும். அரசைப் பொறுத்தவரைக்கும் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.