எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் : தமிழகத்திலே எந்த காலத்திலும் இனிமேல் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரவே முடியாது என்று வீரபாண்டியில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சேலம் மாவட்டம் வீரபாண்டியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது,
எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு, இந்தக் கட்சி இருக்காது என்று தப்புக் கணக்கு போட்டார் தி.மு.க.-வைச் சேர்ந்த அப்போதைய தலைவர். அம்மா துணிந்து நின்று, தன்னந்தனியாக தேர்தலை சந்தித்து, மீண்டும் பிரிந்த கழகத்தை ஒன்றாக இணைத்து, எம்.ஜி.ஆர். கண்ட கனவை அம்மா நனவாக்கினார். எம்.ஜி.ஆர் இந்த கழகத்தை தோற்றுவிக்கும் போது திராவிட முன்னேற்றக் கழகத்தினால் எவ்வளவோ பிரச்சினைகளை சந்தித்தார், எவ்வளவோ சோதனைகளையெல்லாம் தாங்கினார். அத்தனையும் தாண்டித்தான் 11 ஆண்டு காலம் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி புரிந்தார். அவரது மறைவிற்கு பிறகு அம்மாவும், எம்.ஜி.ஆர். வழியிலே நின்று கழகத்தை கட்டிக் காக்கும் போது, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற எதிரிகளால் எவ்வளவோ பிரச்சினைகளையும், சோதனைகளையும் சந்தித்தார். அத்தனையையும் மக்கள் துணை கொண்டு, கழகத்தினுடைய தொண்டர்கள், நிர்வாகிகளின் துணை கொண்டு கிட்டத்தட்ட ஆறு முறை தமிழகத்தினுடைய முதலமைச்சராக பதினைந்தரை ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி தந்த தலைவி அம்மா. இந்தியாவிலேயே எந்த கட்சித் தலைவரும் இவ்வளவு சோதனைகளை சந்தித்தது கிடையாது. அந்த துன்பத்தையெல்லாம் தாங்கிக் கொண்டு, நமக்கு வாழ்வைத் தந்தவர் அம்மா. ஏனென்று சொன்னால், எம்.ஜி.ஆருக்கும், அம்மாவிற்கும் வாரிசுகள் கிடையாது, நாம்தான் வாரிசு. தி.மு.க.வைப் போல கழகத்தில் குடும்ப அரசியல் கிடையாது. யார் சிறப்பாக செயல்படுகின்றார், யார் இயக்கத்திற்கு விசுவாசமாக இருக்கின்றார், யாருக்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கின்றது, யார் மக்களுக்கு சேவை செய்கின்றார்கள் என்று கண்டறிந்து இருபெரும் தலைவர்களும் அவர்களுக்கு பதவி வழங்கினார்கள்.
அந்த இருபெரும் தலைவர்களின் ஆட்சிக் காலத்திலேதான், ஒரு சாதாரண குடும்பத்திலே பிறந்தவர் கூட, ஒரு சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, ஊராட்சி மன்ற தலைவராக, மாவட்டக் குழு தலைவராக, இன்னும் பல்வேறு அமைப்புகளின் தலைவராக வருவதற்கு அடித்தளமாக விளங்கியவர்கள் இருபெரும் தலைவர்கள். ஏனென்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இது போன்று பார்க்க முடியாது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம் ஜனநாயக இயக்கம், ஜனநாயக கட்சி, இந்தியாவிலேயே ஒரு சாதாரண தொண்டன்கூட உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்கின்ற ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி. ஆகவே, யாராலும் இந்த கட்சியை அழிக்க முடியாது. யாரெல்லாமோ முயன்று பார்த்தார்கள், அந்த முயற்சியையெல்லாம் முறியடித்தற்கு காரணம் தொண்டர்கள் ஆளுகின்ற கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன். இன்று நான் முதலமைச்சராக இருந்தால்கூட, உங்கள் முன் தொண்டனாகத்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். எந்த இயக்கத்தில் தொண்டர்கள் இணைந்திருக்கின்றார்களோ, அந்த இயக்கம் வலுமையாக இருக்கும் என்பதை இருபெரும் தலைவர்கள் நமக்கு சொல்லி விட்டு சென்றிருக்கிறார்கள். அவர்களுடைய அறிவுரையை கேட்டுத்தான் நாமும் நடந்து கொண்டிருக்கின்றோம். இந்தியாவிலேயே அதிக தொண்டர்களைக் கொண்ட ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான். அம்மா இருக்கும் பொழுது ஒன்றரை கோடி தொண்டர்கள் இருந்தார்கள், இதுவரைக்கும் ஒரு கோடியே 20 லட்சம் தொண்டர்கள் சேர்ந்து விட்டார்கள், இன்னும் 30 லட்சம் தொண்டர்கள் சேர இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 2 கோடி தொண்டர்கள் இருக்கின்ற ஒரே இயக்கம் தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம்தான். அதுவும், இளைஞர்கள் நிறைந்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம்தான்.
அப்படி இருபெரும் தலைவர்களின் வழியிலே இன்றைக்கு ஆட்சியும் கட்சியும் சிறப்பான முறையிலே பீடுநடை போட்டுக் கொண்டிருக்கின்றது. இதையெல்லாம் பொறுக்கமுடியாத திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார், இப்பொழுது தி.மு.க.-வின் தலைவராகவும் இருக்கிறார். உங்களுடைய அப்பா கருணாநிதி இருக்கும்பொழுதே அண்ணா தி.மு.க-வை ஒன்றும் செய்ய முடியவில்லை, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள், சொல்லுங்கள் பார்க்கலாம். அவர் இருக்கும் பொழுதே இந்த இயக்கத்தின் இருபெரும் தலைவர்கள் எவ்வளவு பிரச்சினையை உண்டாக்கினார்கள் என்பது தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தெரியும். அத்தனையையும் தாக்குப் பிடித்துத்தான் இன்றைக்கு தமிழகத்தில் 28 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இயக்கம்தான். நீங்கள் எங்களை விரட்ட பார்க்கிறீர்கள், ஒன்றும் நடக்காது. தோட்டத்தில் சொல்வார்கள், சொந்த உழைப்பு வலிமையாக இருக்கும். ஆள் வைத்து செய்வது சரியாக இருக்காது, அதுபோல, அது ஆள் வைத்து செய்கிற கட்சி. இது சொந்தமாக உழைக்கின்ற கட்சி, இந்தக் கட்சியை யாராலும் வீழ்த்த முடியாது.
அதுமட்டுமல்ல, எப்பொழுது பார்த்தாலும் இந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எதையும் செய்யவில்லை, மக்கள் எந்தப் பயனும் அனுபவிக்கவில்லை என்று ஸ்டாலின் பேசி வருகிறார். இந்த ஆட்சியில் தான் நிறைய திட்டங்களை அம்மா கொடுத்திருக்கிறார்கள். இன்றைக்கு இந்திய துணைக் கண்டத்திலேயே அதிக திட்டங்களை கொண்டு வந்த ஒரே தலைவி அம்மாதான். இன்று அவர் வழியிலே தான் அம்மா அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்திலே அம்மா வாக்குறுதி அளித்தார்கள். நான் தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருந்தால் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவேன் என்று சொன்னார்கள். கிட்டத்தட்ட ஒரு கோடியே 84 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய ஒரே அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுதான். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் நடைமுறைப்படுத்தியது கிடையாது.
இன்றைக்கு அம்மாவின் ஆட்சியில் கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் கிட்டத்தட்ட 36 லட்சம் நபர்களுக்கு மடிக்கணினி கொடுத்திருக்கிறோம், இன்னும் 15 லட்சம் நபர்களுக்கு கொடுக்க இருக்கிறோம், கிட்டத்தட்ட 51 லட்சம் நபர்களுக்கு கொடுத்து விடுவோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் கிடையாது. இந்த விஞ்ஞான காலத்தில் அறிவுபூர்வமான கல்வியைக் கொடுத்தால்தான் உலக அளவில் நம்முடைய மாணவ, மாணவிகள் போட்டி போட இயலும்.
தி.மு.க.வினர் தினந்தோறும் பொய் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்குத்தான் மடிக்கணினியை கொடுத்திருக்கிறோம். உங்களைப் போல் ஏமாற்றுப் பேர்வழிகள் இனிமேல் தமிழகத்திலே எந்தக் காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது என்பதை திட்டவட்டமாக சொல்லிக் கொள்கிறேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக