முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரிடர் காலங்களில் நிவாரண பணிகளில் சிறப்பாக செயல்படும் போலீசாருக்கு ஆண்டுதோறும் நேதாஜி பெயரில் தேசிய விருது : பிரதமர் மோடி

ஞாயிற்றுக்கிழமை, 21 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணியில் சிறப்பாக செயல்படும் போலீசாருக்கு ஆண்டுதோறும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் தேசிய விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சுதந்திர இந்திய அரசு பிரகடனத்தை அக்டோபர் 21,1943-ல் வெளியிட்டார். இதன் 75-வது ஆண்டு விழாவில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அதனை நினைவுகூரும் வகையில், பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றினார். அப்போது, பேரிடர் காலங்களில் சிறப்பாக செயல்படும் போலீசாருக்கு ஆண்டுதோறும் நேதாஜி பெயரில் தேசிய விருது வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, அவர் மேலும் தெரிவித்ததாவது, பேரிடர் காலங்களில் மீட்புப் பணியிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் சேவைகளிலும் சிறப்பாக செயல்படும் போலீசாருக்கு இந்த ஆண்டு முதல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் தேசிய விருது வழங்கப்படும். இந்த விருதுகள் நேதாஜி பிறந்த தினமான ஜனவரி 23-ம் தேதி அறிவிக்கப்படும். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரில் இருப்பவர்கள் தைரியமான போலீசார். அவர்களது தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை தேசம் மறந்து விடாது. இவர்கள் யார்? ரயில் விபத்தின் போது மீட்புப் பணியில் ஈடுபட்டனரா, தீ விபத்தின் போது மீட்புப் பணியில் ஈடுபட்டனரா அல்லது, கட்டிடம் இடிந்த விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனரா, எப்போது மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் என்பது யாருக்கும் தெரியாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து