முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமர் கோயில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்:பா.ஜ.க

ஞாயிற்றுக்கிழமை, 21 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது. அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜிவிஎல். நரசிம்ம ராவ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஐதராபாதில், செய்தியாளர்களிடம் அவர்  கூறியதாவது:ராமர் கோயில் கட்டுவது தொடர்பான விஷயத்தை பொறுத்தவரையில் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது. இதை நாங்கள் எப்போதும் வலியுறுத்தி வருகிறோம். நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள், ஹிந்துக்களின் விருப்பமும், நம்பிக்கையையும் அதுதான்.இதுகுறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம். தீர்ப்பு வந்த பிறகு, ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது உறுதி என்ற போதிலும், அதை நீதிமன்ற உத்தரவு மூலமாக அல்லது சம்பந்தப்பட்ட சமூகத்தினரிடையே சுமூகத் தீர்வு ஏற்படுத்துவதன் மூலமாக மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், அது இதுவரை நடக்கவில்லை.ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தடை ஏற்படுத்தி வருகின்றனர். வழக்கறிஞராகவும், அரசியல் தலைவராகவும் இருக்கக் கூடிய அக்கட்சியின் நிர்வாகிகள், வழக்கு விசாரணைகளில் தடைகளை ஏற்படுத்துவதன் மூலமாக ராமர் கோயில் வழக்கின் தீர்ப்பை தாமதிக்க முயற்சிக்கின்றனர் என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து