முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் படைகளை விலக்கி கொள்வது குறித்து வடகொரியா, தென் கொரியா இடையே மீண்டும் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

பான்முன்ஜோம்,வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான பான்முன்ஜோம் எல்லைப் பகுதியில், இரு தரப்பினரும் குவித்துள்ள படைகளை விலக்கிக் கொள்வது குறித்த பேச்சுவார்த்தை  மீண்டும் நடைபெற்றது.

இதுகுறித்து தென் கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் படை விலக்கல் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக அந்தக் கூட்டம் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.வட - தென் கொரிய நாடுகளிடையே இடையிலான பான்முன்ஜோம் எல்லை கிராமம் கூட்டு பாதுகாப்புப் பகுதி என்று அழைக்கப்படுகிறது. இரு தரப்பினருக்கும் பொதுவான பகுதி என்று அந்த எல்லைப் பகுதி அறிவிக்கப்பட்டிருந்தாலும், அண்மைக் காலமாக இரு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்படும் சமரச நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பான்முன்ஜோம் எல்லை கிராமத்தில் நிறுத்தப்பட்டுள்ள படைகளை விலக்கிக் கொள்வது குறித்த பேச்சுவாத்தை அந்த கிராமத்தில் கடந்த 16-ம் தேதி நடைபெற்றது .

இதில் வட மற்றும் தென் கொரிய பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கொரியப் பகுதிக்கான ஐ.நா. பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிலையில், அந்தப் பேச்சுவார்த்தையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் தற்போது மீண்டும் அந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து