எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,தான் பிறந்த சொந்த மாவட்டத்தின் வளங்களையும், இந்திய தேசத்தின் சொத்துக்களையும் சூறையாடியவர், நெடுஞ்சாலைத்துறை டெண்டர் பற்றி ஆப்பிள், பேரிக்காய் என்று அரைவேக்காட்டுத்தனமான அறிக்கையை வெளியிட்டுள்ளார் டி.ஆர். பாலு என்று தங்கமணி காட்டமாக தாக்கியுள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், மின்துறை அமைச்சருமான தங்கமணி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
சொந்த கட்சித் தொண்டர்களுக்கே ரத்தக் கண்ணீர் வரக்கூடிய வகையில் சுயநல அரசியல் செய்பவர் என்று 2012-ம் ஆண்டே தனது தலைவரால் சபிக்கப்பட்ட டி.ஆர்.பாலு கனிகளுக்கிடையே வேறுபாடுகளைக் கண்டறியும் வித்தையை கரைத்துக் குடித்தவர் போலிருக்கிறதே ! என்று நினைக்கத் தோன்றும் வகையில் ஆப்பிள், பேரிக்காய் என்றெல்லாம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அரைவேக்காட்டு அறிக்கையை...ஊழல் மகா சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுத்த டி.ஆர்,. பாலு, மக்களை “ஞான சூனியமாக்கும்” முயற்சியில் இறங்கி, தேசிய-மாநில நெடுஞ்சாலைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். “தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது மட்டுமே மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் பணி என்றும், சாலைப் பணிகளை செயல்படுத்துவது, டெண்டர் விடுவது, டெண்டர்களை முடிவு செய்வது எல்லாம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பணி என்றும்” தனது அறிக்கையில் கூறியிருக்கும் டி.ஆர்.பாலுவுக்கு, மாநில நெடுஞ்சாலைப் பணிகளை செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைகள் தெரியாமல் போனதால் ஆப்பிள், பேரிக்காய் என்று அரைவேக்காட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
விளக்க வேண்டிய சூழ்நிலை...குழப்பத்தில் இருக்கும் டி.ஆர்.பாலு, தெளிவு பெறுவதற்காக மாநில நெடுஞ்சாலைப் பணிகளைப் பற்றி விளக்க வேண்டி இருக்கிறது. தமிழ் நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு பணி மேற்கொள்ளப்படுவதை நடைமுறைப்படுத்த, மூத்த அதிகாரிகளைக் கொண்ட மதிப்பீட்டுக்குழு, நிலைக்குழு ஆகிய இரண்டு கமிட்டிகள் உள்ளன. அவை, நிதித் துறை துணைச் செயலரும், திட்ட இயக்குநரும், உறுப்பினர்களாக உள்ள மதிப்பீட்டு குழு முதலில் தொழிற்நுட்பத்தை அம்சங்களை சரிபார்க்கிறது. அதன் பிறகு நிதி குறித்த அம்சங்கள் சரிபார்க்கப்படுகிறது. பின்னர் மதிப்பீட்டுக்குழுவில் இருந்து ஒப்பந்தங்கள் நிலைக்குழுவுக்கு அனுப்பப்படுகின்றன.
ஒப்பந்ததாரருக்கு டெண்டர்...நிதித் துறை செயலர், நெடுஞ்சாலைத் துறை செயலர், திட்ட இயக்குநர், கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறையின் முதன்மைப் பொறியாளர் ஆகியோர் கொண்ட மதிப்பீட்டுக்குழு ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கும் ஒப்பந்தத்தின் விவரங்களை ஆய்வு செய்து, அது சரியாக இருப்பின், உலக வங்கியின் பரிசீலனைக்கு அனுப்புகிறது. உலக வங்கி அந்த ஆவணங்களை சரிபார்த்து, ஏற்புடையதாக இருந்தால், அந்த ஒப்பந்ததாரருக்கு டெண்டர் வழங்கப்படுகிறது. இது, தி.மு.க. ஆட்சி நடைபெற்ற நேரத்திலும் நடைமுறையில் இருந்தது. இப்போதும் நடைமுறையில் உள்ளது.
முதல்வருக்கு தொடர்பு கிடையாது...தி.மு.க. ஆட்சிக் காலத்தில், ஒப்பந்த விண்ணப்பங்களை பெட்டியில் போடும் திட்டம், நடைமுறையில் இருந்தது. தற்பொழுது, அரசில், டெண்டர் முறையில் எந்தவித ஊழல் முறைகேட்டுக்கும் வழியில்லாத வகையில் டெண்டர் பணிகள் நடைபெறுகின்றன. தமிழ் நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறையிலும், மூத்த அதிகாரிகளை உறுப்பினர்களாகக் கொண்ட இரண்டு குழுக்கள்தான் டெண்டர்களை முடிவு செய்கின்றனவே தவிர, இதில் துறையின் அமைச்சருக்கும், தற்போது துறையின் அமைச்சராக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. டெண்டர் தொடர்புடைய கோப்புகள், துறையின் அமைச்சருக்கு வராத போது, சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு எப்படி கூறமுடியும்?
தி.மு.க. ஆட்சியில் ஊழல் என்று முதல்வர் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சொல்கிறாரே! என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் டி.ஆர் . பாலு. அது குறித்த கேள்வியை பாலுவுக்கு மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
முடிச்சு போடுவது ஏன்?முதலமைச்சர் மீது ஊழல் கண்காணிப்புத் துறையிடம் புகார் கொடுத்த பின், தி.மு.க-வின் ஆர்.எஸ். பாரதி, ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசி வழித்தடத்தில் ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க ரூ. 2.20 கோடிதான் செலவாகும் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்படியானால் 12 ஆண்டுகளுக்கு முன், 2006-ம் ஆண்டு,டி.ஆர். பாலு மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, சேலம் - குமாரபாளையம் நான்கு வழிச் சாலை, ஒரு கிலோ மீட்டர் சாலை அமைப்பதற்கு ரூ. 8.78 கோடி செலவாகியது எப்படி ? மற்றும் குமாரபாளையம் - செங்கப்பள்ளி சாலை அமைக்க 1 கி.மீ.க்கு ரூ.7.83 கோடி செலவாகியது எப்படி? என்று தான் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விகளுக்கு டி.ஆர். பாலு நேரடியாக பதில் அளிக்காமல் ஆப்பிளுக்கும், பேரிக்காய்க்கும் முடிச்சு போடுவது ஏன்? இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.