முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகையாளர் ஜமாலின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி வீட்டில் கண்டெடுப்பு

புதன்கிழமை, 24 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

இஸ்தான்புல் : பத்திரிகையாளர் ஜமாலின் உடல் பாகங்கள் சவுதி அரேபிய தூதரக அதிகாரியின் வீட்டில் கிடைத்திருப்பதாக பிரிட்டன் நாட்டு செய்தித் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஜமாலின் உடல் பாகங்கள் பல கூறுகளாக வெட்டப்பட்ட நிலையிலும், முகம் சிதைக்கப்பட்ட நிலையிலும் சவுதி தூதரக அதிகாரியின் வீட்டின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் வீசப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகத்துக்குச் சென்ற செய்தியாளர் ஜமால், அதன் பிறகு மாயமானது குறித்து பூர்வாங்க விசாரணை நடத்தப்பட்டது.

அதில், தூதரகத்துக்குள் வந்த கஷோகிக்கும், அங்கிருந்த சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. பிறகு அந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஜலால் கஷோகி உயிரிழந்தார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து