முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடைமேடை உடைந்ததில் பாதாள சாக்கடைக்குள் விழுந்த 2 பெண்கள்

வெள்ளிக்கிழமை, 26 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

அங்காரா,துருக்கி டியார்பகிர் நகரத்தில் சாலையும், நடைமேடையும் இணையும் பகுதி ஒன்று திடீர் என்று உடைந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் பாதாள சாக்கடைக்குள் விழுந்தனர்.

அந்த பகுதி உடைந்து பெரிய பள்ளம் ஏற்படும் சமயத்தில் அங்கு இரண்டு பெண்கள் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். ஒருவர் பெயர் டாக்டர் சூசன் குடெ பாலிக் என்றும், மற்றொருவர் பெயர் ஓஸ்லாம் துயாம்ஸ் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது சாலை அப்படியே உடைந்து உள்ளே சென்றுள்ளது. இது அங்கு இருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளது. இந்த சி.சி.டி.வி. பதிவு தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த சாலையும் நடைமேடையும் இணையும் பகுதி உடைந்து சாக்கடைக்குள் சென்றதால், இரண்டு பெண்களும் பூமிக்கு அடியில் சிக்கி இருந்துள்ளனர். இவர்களை மீட்க 4 மணி நேரம் மீட்பு படை வீரர்கள் போராடினார்கள். ஒரு பெண்மணி மட்டும் அதிக ஆழத்தில் சிக்கி இருந்துள்ளார். ஆனால் இவர்கள் இருவரும் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காலில் மட்டுமே காயம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து