முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமலாக்கத் துறை புதிய தலைவராக சஞ்சய் குமார் மிஸ்ரா நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,அமலாக்கத் துறையின் புதிய தலைவராக இந்திய வருவாய்த் துறை அதிகாரி சஞ்சய் குமார் மிஸ்ராவை மத்திய அரசு நியமித்துள்ளது. அமலாக்கத் துறை தலைவராக இருந்த கர்னல் சிங் நேற்றுடன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அந்தப் பதவியில் சஞ்சய் குமார் மிஸ்ராவை மத்திய அரசு நியமித்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-1984-ம் ஆண்டு பிரிவு இந்திய வருவாய்த் துறை அதிகாரியான மிஸ்ரா, அமலாக்கத் துறையின் முதன்மை சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கூடுதல் பொறுப்பாக அமலாக்கத் துறை இயக்குநர் பதவி 3 மாதங்களுக்கு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை இயக்குநராக 3 மாதங்களுக்கோ, நிரந்தர இயக்குநர் நியமிக்கப்படும் வரையிலோ, அல்லது இந்த இரண்டில் எது முன்கூட்டி வருகிறதோ, அது வரையிலும் பதவி வகிப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து