முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைக்குழந்தையுடன் கடமையாற்றும் பெண் போலீஸ்: போட்டோ வைரல்

ஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

போபால்,மத்திய பிரதேசத்தில் ஜான்சி என்ற பகுதிக்கு உட்பட ஒரு போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்து வருபவர்தான் அர்ச்சனா. இவருக்கு வயது 30. இவரது கணவர் அரியானாவில் ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். தற்போது 6 மாதத்தில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. 6 மாதமே என்பதால் வீட்டில் விட்டுச்செல்ல முடியாது என்பதால் பணிக்கு வரும் போது தன்னுடனே குழந்தையை அழைத்து வந்து விடுகிறார்.

தற்போது, அர்ச்சனா தன்னுடைய போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டே அடிக்கடி அருகில் இருக்கும் தன் குழந்தையையும் கவனித்து கொண்டு வருவது போல ஒரு போட்டோ இணையத்தில் பரவி வருகிறது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆய்வாளர் நவ்நீத் சேக்ரா என்பவர்தான் இந்த போட்டோவை ஷேர் செய்துள்ளார். இவர் அர்ச்சனாவின் சீனியர் ஆபீசர் ஆவார். அர்ச்சனாவின் இந்த போட்டோவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து