முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

44 ஆண்டுகளில் மனிதனின் செயலால் 60 சதவீத பிராணிகள் அழிந்து விட்டன உலக வன உயிரி நிதியம் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

பெர்ன்,கடந்த 44 ஆண்டுகளில் மனிதர்களின் அதிகமான நுகர்வாலும், செயல்பாடுகளாலும் உலகில் உள்ள முதுகெலும்புள்ள பிராணிகளான பறவைகள், பாலூட்டிகள், மீன், நீர், நிலத்தில் வாழ்வன, ஊர்வன ஆகியவற்றின் எண்ணிக்கை 60 சதவீதம் குறைந்து விட்டது என்று உலக வன உயிரி நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தி லிவிங் பிளானட் ரிப்போர் ஆப் தி குளோபல் பண்ட் பார் நேச்சுர் என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக 1970-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டுக்குள் இருக்கும் 4,005 வகைஉயிரினங்கள் உள்ளிட்ட 16 ஆயிரத்து 704 விலங்குகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின் இப்போது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. பூமியின் சுற்றுச்சூழல், வாழும் சூழல், பூமியின் நிலை ஆகியவை மனிதர்களின் செயல்பாடுகளில் வேதனை கொள்ளும் நிலையில் கெட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட விலங்குகளில் மனிதர்களின் நடவடிக்கையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருப்பது நன்னீர் வாழ் உயிரினங்கள் என்று கூறுகிறது. அதாவது, கடந்த 44 ஆண்டுகளில் 83 சதவீத நன்னீர் உயிரினங்கள் மனிதர்களின் நடவடிக்கையாலும், செயல்பாடுகளாலும், நுகர்வாலும் அழிந்துவிட்டன. 20 நூற்றாண்டில் உலகில் மிக அதிகபட்ச அழிவை முதுகெலும்புள்ள பிராணிகள் சந்தித்துள்ளன.இந்த பல்லுயிர் சூழல் மிக மோசமாக கெட்டுப்போவதற்கு முக்கியக் காரணம் மனிதர்களின் நடவடிக்கை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து