முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி விவகாரத்தில் இந்துக்கள் பொறுமை இழந்தால் என்ன ஆகுமோ? மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,அயோத்தி விவகாரத்தில் இந்துக்கள் பொறுமை இழந்தால் என்ன ஆகுமோ? என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியிருப்பது புதிய சர்ச்சையினை உருவாக்கியிருக்கிறது

இதுதொடர்பாக டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- அயோத்தி பிரச்சினையை இந்து - முஸ்லிம் இடையிலான பிரச்சினையாக மாற்ற வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்ட வேண்டும் என்று பெரும்பான்மையான இந்துக்கள் விரும்புகின்றனர். ஸ்ரீராமர் இந்துக்களின் மத நம்பிக்கையின் அடையாளம். அயோத்தி விவகாரத்தில் இந்துக்கள் நெடுங்காலமாக பொறுமை இழந்து வருகின்றனர். அது எல்லை மீறிப் போய் இந்துக்கள் முற்றிலும் பொறுமை இழந்தால் என்ன ஆகுமோ? என்று அச்சமாக உள்ளது என்று கூறினார். அமைச்சரின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து