முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜமால் கொலை விவகாரம்: சவுதிக்கு ஆயுத ஏற்றுமதியை நிறுத்திய சுவிட்சர்லாந்து

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

சுவிஸ் : பத்திரிகையாளர் ஜமால் கொலை வழக்கை கருத்தில் கொண்டு சவுதிக்கு ஆயுதம் ஏற்றுமதி நிறுத்தப்படுவதாக சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்துறைக்கான செய்தித் தொடர்பாளர் கூறும் போது,

சவுதிக்கு ஆயுத ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. ஜமால் கொலையில் அடுத்தடுத்து தெரியவரும் முன்னேற்றங்கள் தொடர்ந்து இந்த முடிவு திரும்ப பெறப்படலாம் என்றார்.

ஜமாலின் மரணம் தொடர்பாக, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் சவுதிக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று எச்சரித்தன. இதில் ஜெர்மனி சவுதிக்கு கடந்த வாரம் ஆயுதம் ஏற்றுமதி செய்வது நிறுத்தப்படும் என்று அறிவித்தது. இந்த நிலையில் சுவிட்சர்லாந்து சவுதிக்கு ஆயுதம் வழங்குவது நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து