முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடன் விவகாரத்தில் ரிசர்வ்வங்கியுடன் ஆலோசிக்க மத்திய அரசு முடிவு

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, வங்கிகளின் கடன் விவகாரம் உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அண்மைக் காலமாக வாராக் கடன் உள்ளிட்ட பிரச்னைகளில் மத்திய அரசுக்கும், ஆர்.பி.ஐ-க்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்நிலையில், ஆலோசனை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆர்.பி.ஐ சட்டத்தின் 7-ஆவது பிரிவின் கீழ் இந்த ஆலோசனைக்கான நோட்டீஸை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இப்பிரிவின் கீழ் ஆர்.பி.ஐ-க்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்புவது இதுவே முதல்முறையாகும்.

ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஆர்.பி.ஐ-யின் செயல்பாட்டு சுதந்திரம் என்பது ஆர்.பி.ஐ  சட்டத்துக்குள்பட்டதுதான். இப்போது, அரசு அனுப்பியுள்ள நோட்டீஸை ஆர்.பி.ஐ  ஏற்றுக் கொள்ள வேண்டும். மத்திய அரசு மற்றும் ஆர்.பி.ஐ யின் செயல்பாடுகள் பொது நலன் சார்ந்ததாகவும், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து