முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கு : பீகார் முன்னாள் பெண் அமைச்சருக்கு பிடி வாரண்ட்

வியாழக்கிழமை, 1 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பாட்னா : பீகார் மாநில முன்னாள் அமைச்சர் மஞ்சு வர்மாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் மகளிர் காப்பகத்தில் தங்கியிருந்த 44 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில் முக்கிய குற்றவாளியாக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் தாக்கூர் என்பவர் சந்தேகிக்கப்பட்டார். இதை தொடர்ந்து இவரது வீட்டில் சோதனை செய்யப்பட்டதில் கிட்டத்தட்ட 50 துப்பாக்கித் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தனது கணவர் சந்திரசேகர் தாக்கூர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சர் பொறுப்பிலிருந்து மஞ்சு வர்மா விலகினார். அதைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார். இநத்நிலையில் பீகார் மாநிலத்தின் மஞ்சால் நீதிமன்றம் ஆயுதத் தடுப்புச் சட்டத்தின்படி மஞ்சு வர்மாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவை பிறப்பித்துள்ளது. அதனோடு அவரைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து