முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியையை கழுத்தை அறுத்து கொன்ற காதலன்

வெள்ளிக்கிழமை, 2 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

கும்பகோணம்,திருவிடைமருதூரில் ஆசிரியை வசந்த பிரியா கொலை வழக்கில் அவரை கொலை செய்து விட்டுத் தப்பிய அவரது மாமா மகன் நந்தகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நிச்சயதார்த்தம் முடிந்து 5 நாள்தான் ஆன நிலையில், ஆசிரியை வசந்த பிரியா கொடூரமாக கொலை செய்யப்பட்டதால் திருவிடைமருதூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாபநாசம் 108 சிவாலயம் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது 24 வயது மகள் வசந்தபிரியா. ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்த இவர், கும்பகோணம் லால் பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் டீச்சராக வேலை செய்து வந்தார். இவருக்கும் வலங்கைமானைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 28-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஸ்கூல் முடிந்து வெளியே வந்த இவரை, பள்ளி வாசலில் ஒருவர் பைக்கில் அழைத்து சென்றுள்ளார். இருவரும் காவிரி ஆற்றங்கரை படித்துறைக்கு சென்றுள்ளனர்.

ஆனால் சிறிது நேரத்தில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில், உயிரை கையில் பிடித்து கொண்டு அலறி அடித்து கொண்டு நடுரோட்டில் ஓடி வந்தார் வசந்தபிரியா. தொடர்ந்து ஓட முடியாத நிலையில், அப்படியே ரோடு ஓரமாக சரிந்து விழுந்து ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக திருவிடைமருதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வசந்தபிரியாவின் உடலை கைப்பற்றியதுடன், கொலை செய்யப்பட்ட இடத்தில் இரண்டு செல்போன்கள் மற்றும் பேனா கத்தியையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், பள்ளி வாசலில் இளைஞர் ஒருவர் ஆசிரியையை பைக்கில் ஏற்றி சென்ற காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி இருப்பதை கண்டுபிடித்தனர்.

படித்துறையில் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வாக்குவாதம் தகராறாக முற்றிப்போகவும், பிறகு ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த நபர், மறைத்து வைத்திருந்த கத்தியால் வசந்தப் பிரியாவின் கழுத்தை அறுத்துள்ளதாகவும் போலீசார் சந்தேகித்தனர்.மேலும் அந்த இளைஞர் ஏற்கனவே ஆசிரியையை அவர் காதலித்தவராக இருக்கலாம் என்றும் வேறு ஒருவருடன் நிச்சயம் ஆகிவிட்ட ஆத்திரத்தில் டீச்சரை கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் யூகித்தனர். அதனால் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள கொலை செய்த இளைஞரை போலீசார் தேடி வந்தனர்.விசாரணையில் பைக் ஆசாமியின் பெயர் நந்தகுமார் என்றும், அவர் வசந்த பிரியாவின் சொந்த மாமன் மகன் என்றும் தெரிய வந்தது. நந்தகுமார், வசந்த பிரியாவை ஒரு தலையாக காதலித்துள்ளார். ஆனால் வசந்த பிரியா வீட்டில் வேறு ஒருவருக்கு நிச்சயித்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் நேற்று முன்தினம் வசந்த பிரியாவை பள்ளி முடிந்ததும் பைக்கில் ஏற்றி படித்துறைக்குக் கூட்டிப் போய் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுத்துள்ளார் வசந்த பிரியா. இதனால் கோபமடைந்த நந்தகுமார் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பினார். திட்டக்குடியில் தலைமறைவாக இருந்த அவரை இரவோடு இரவாக போலீசார் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து