முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வலுப்பெறும் வடகிழக்கு பருவமழை: தீபாவளியன்று தென் தமிழகத்தில் கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,வடகிழக்கு பருவமழை 6,7, 8 தேதிகளுக்கு பின் வலுப்பெறும் தீபாவளி அன்று தென் தமிழகத்தில் கனமழை இருக்கும் வட தமிழகத்தில் மழை அவ்வளவாக இருக்காது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பாபநாசத்தில் 15 செ.மீட்டரும், மணிமுத்தாறு மற்றும் குன்னூரில் 6 செ.மீ மழையும் பெய்துள்ளது. பல இடங்களில் 3 செ.மீட்டர் வரை பெய்துள்ளது. தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் வரும் நாளை 6-ம் தேதியையொட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் குமரி கடற்பகுதிகளை 6-ம் தேதி முதல் 8 தேதி வரை கடக்கக்கூடும்.

இதன் காரணமாக வடகிழக்குப்பருவமழை 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை வலுப்பெறக்கூடும். மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 7-ம் தேதி மற்றும் 8 தேதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். இப்பகுதியில் பலத்த காற்றானது மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 6 மற்றும் 7-ம் தேதிகளிலும், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 7-ம் தேதி மற்றும் 8 தேதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று கோரப்படுகிறது. ஆழ்க்கடல் பகுதிகளில் இருக்கும் மீனவர்கள் வரும் 6-ம் தேதிக்குள் கரைக்கு திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அடுத்து 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். தீபாவளிக்கு 6-ம் தேதி முதல் 8 தேதி வரை தென் தமிழகத்தில் அதிக மழை இருக்கும். வட தமிழகத்தில் அவ்வளவாக இருக்காது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து