எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சபரிமலை,மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. இதையொட்டி சன்னிதானம், நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் கமாண்டோ படை குவிக்கப்பட்டுள்ளது சோதனைக்கு பிறகே பக்தர்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் மாதாந்திர பூஜை நடத்துவதற்காக திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாள்களுக்கு நடை திறக்கப்படவுள்ளது. கடந்த மாதம் இதேபோன்று நடை திறக்கப்பட்டபோது, பெண்களை அனுமதிக்க மறுத்து கடும் போராட்டங்கள் நடைபெற்றதை கருத்தில் கொண்டு, இந்த முறை காவல்துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சபரிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில், 100 பெண் காவலர்கள் உள்பட 1,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சன்னிதானம், நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 20 பேர் அடங்கிய கமாண்டோ படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிகள் உள்பட பல இடங்களில், சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி தீபஒளித் திருநாளின் நள்ளிரவுப் பொழுது வரையில் 144 தடையாணை அமல்படுத்தப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்துவதற்கு வயது ரீதியான கட்டுப்பாடு பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து வயதுப் பெண்களையும் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 28-இல் உத்தரவிட்டது.அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 17-ஆம் தேதி, மாதாந்திர பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, நடுத்தர வயதைச் சேர்ந்த 12 பெண்கள் கோயிலுக்குள் நுழைய முயற்சித்தனர். இருப்பினும், பக்தர்களின் கடுமையான போராட்டங்கள் காரணமாக அப்பெண்கள் கோயிலுக்கு செல்வது தடுத்து நிறுத்தப்பட்டது. அதே, அந்த போராட்டங்களின்போது ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதாக கேரள அரசு கூறி வருகிறது.
மீண்டும் நடை திறப்பு: இத்தகைய சூழலில், மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் மீண்டும் திறக்கப்படவுள்ளது. தந்திரி கண்டரரூ ராஜீவரு, மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதரி ஆகியோர் ஸ்ரீகோயிலை, 5-ம் தேதி மாலை 5 மணிக்கு திறந்து விளக்கு ஏற்றவுள்ளனர். அதற்கு அடுத்த நாளில் சித்ரா திருநாள் பூஜை நடத்தப்பட்ட பின்னர், இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: நிலக்கலுக்கு செல்லும் பல்வேறு வழிகளில், காவல்துறை வேகத் தடுப்புகளை அமைத்துள்ளது. காவல்துறையினரின் சோதனைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படவுள்ளன. அதுவும், நிலக்கல் வரை மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
இதற்கிடையே, பக்தர்களின் போராட்டத்துக்கு பக்க பலமாக இருக்கும், மாநில பா.ஜ.க.வின் தலைவர் ஸ்ரீதரன் பிள்ளைக்கு மர்ம நபர்கள், துரித அஞ்சல் மூலமாக கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு தயார் - கேரள அரசு: சபரிமலை தீர்ப்புக்கு எதிரான போராட்டங்களை, முன்னின்று ஒருங்கிணைத்து வரும், நாயர் சமுதாய சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று கேரள அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தேவஸ்வம் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், செய்தியாளர்களிடம் கூறுகையில், நாயர் சங்கத்தினருடனான கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கு அரசு தயாராகி வருகிறது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திறந்த மனதுடன் இருக்கிறோம். நாயார் சங்க அலுவலகத்தை, மர்ம நபர்கள் திட்டமிட்டுத் தாக்கியுள்ளனர் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.