எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அரசு தேர்வாணயத்தின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் 17 ஆயிரம் பேர் அரசு வேலைவாய்ப்புக்கு எந்த புகாரும் இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் நந்தகுமார் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது குறித்து சென்னையில் இருவரும் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தனர், அப்போது அவர்கள் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தன்னுடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் முற்றிலும் வெளிப்படைத் தன்மையினை கொண்டு வரும் விதமாக தகுந்த மாற்றங்களை படிப்படியாக செயல்படுத்தி வருகிறது. தேர்வு எழுதும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணம் ஆணையம் இம்முயற்சிகளை எடுத்து வருகின்றது.
தேர்வாணையத்தால் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் பொழுது தேர்வர்களின் மனதில் எழும் கேள்விகளுக்கு ஓரே இடத்தில் பதில் பெறுவதற்கு ஏதுவாக அண்மையில் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய குறும்படம் ஒன்றை Youtube தளத்தில் ஆணையம் வெளியிட்டுள்ளது. இது பெரும் வரவேற்பைப் பெற்று பல்லாயிரக்கணக்கான தேர்வர்களால் பார்வையிடப்பட்டுள்ளது.
தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்கும் முறையில் இருந்து இணைய வழியில் அவர்தம் இருப்பிடத்திலிருந்தே விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டதினால் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை பலமடங்காக அதிகரித்துள்ளது.
2010-ம் ஆண்டு பல்வேறு தேர்வுகளுக்கு மொத்தம் 17.5 லட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்தனர். தற்போது இணையவழியே விண்ணப்பம் பெறப்படும் நிலையில், 40 லட்சம் வரையில் ஓராண்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இச்செயல்பாட்டினால் தேர்வாணையத்தின் பணிச்சுமையை குறைந்ததோடு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறைமீதான நம்பகத் தன்மையை விண்ணப்பதாரர்களிடையே அதிகரித்துள்ளது.
தேர்வுமுறையில் மாற்றம்
கடந்த ஓர் ஆண்டு காலமாக தேர்வாணையம் நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தேர்வு எழுதுபவர்களின் அனைத்து விவரங்களும் அடங்கிய கொள்குறி (OMR) விடைத்தாள்கள் வழங்கப்பட்டு வந்தன. இதன் மூலம் தேர்வு குறித்து தேர்வர்கள் மனதில் இருந்த ஐயப்பாடுகள் நீக்கப்பட்டதுடன் எவ்வித தவறும் நிகழாத வண்ணம் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு
எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்காக தேர்வாணையத்திற்கு நேரில் வரும் நடைமுறை இருந்து வந்தது. இதனால் தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அவர்தம் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுடன் நேரில் வந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் ஒரு தேர்வர் நேரடியாகவோ பெற்றோர் / பாதுகாவலருடனோ கலந்தாய்வுக்கு தேர்வாணையத்திற்கு நேரடியாக வந்து செல்ல சுமார் 2,000 ரூபாய் பயணச்செலவு உள்ளிட்ட பொருட்சுமையுடன் காலவிரயமும் ஏற்படுகிறது என்பதை கவனமுடன் பரிசீலித்த தேர்வாணையம் இணைய வழியிலேயே தேர்வர்கள் அவர்தம் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையங்கள் மூலமாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொகுதி- IV தேர்விற்காக 31,424 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவ்வாறு பெறப்பட்ட சான்றிதழ்கள் அனைத்தும் 35 நாட்களுக்குள் சரிபார்த்து முடிக்கப்பட்டுள்ளன. இதே எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களை நேரில் அழைத்து சான்றிதழ் சரிபார்க்க 157 நாட்கள் ஆகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயல் மூலம் சுமார் ஆறு கோடி ரூபாய் அளவிற்கு விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படயிருந்த செலவும் வீண் அலைச்சலும் தவிர்க்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மற்றும் கலந்தாய்வு போன்ற பல்வேறு பணிகளுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழியே தகவல் பறிமாற்றம் செய்யப்பட்டு தாமதம் எதுவும் இன்றி குறித்த நேரத்தில் பணிகள் முடிக்கப்பட்டு வருகின்றன.
தேர்வு முடிவுகள்
மேலும் கடந்த 3 மாதங்களாக தேர்வாணையம் வெளியிடும் அனைத்து அறிவிக்கைகளிலும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு மற்றும் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் முறையாக அறிவிக்கப்பட்டு அதே காலகட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இது தவிர ஒரு நாளில் 100 தேர்வர்கள் மட்டுமே கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டு பணி ஒதுக்கீட்டாணை வழங்கப்பட்டு வந்தது. அண்மையில் நடைபெற்ற உதவி தோட்டக்கலை அலுவலர்களுக்கான தெரிவுக்கு ஒரே நாளில் சுமார் 800 விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிநியமன ஆணையும் அன்றே வழங்கப்பட்டு தேர்ந்தோர் பட்டியலும் துறைத்தலைவருக்கு அன்றையதினமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு நடைபெற்ற நாளிலிருந்து வெறும் 67 நாட்களில் பணி ஒதுக்கீட்டாணை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் அண்மையில் நடைபெற்ற நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் தேர்வு அறிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் முதனிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தேர்ந்தோர் பட்டியல் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, ஒருங்கிணைந்த பொறியியல் பணியாளர்களுக்கான தேர்வு முடிவுகள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 7 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி-I க்கான முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் தவிர்த்து எந்த ஒரு தேர்வு முடிவுகளும் மூன்று மாதங்களுக்கு மேல் நிலுவையில் இல்லை. மேலும் நிலுவையில் உள்ள தேர்வு முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்ற தேர்வு முடிவு கால அட்டவணையும், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அவ்வப்போது தெரிவிக்கப்படுகின்றன.
தேர்வு அறிவிக்கைகளைப் பொறுத்த வரையில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பாண்டில் 25 அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டு இறுதிக்குள் மேலும் பல்வேறு பதவிகளுக்கான 20 அறிவிக்கைகள் வரவிருக்கின்றது. தேர்வாணைய வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையில் நடப்பாண்டில் 17,000-க்கும் அதிகமான தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டு அரசின் பல்வேறு துறைகளுக்கும் எவ்வித குறைபாடுகளுக்கும் இடமின்றி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
தேர்வாணையத்தில் செயல்பட்டு வரும் மந்தனத்தன்மை கொண்ட துறைகள் மற்றும் பிரிவுகள் அனைத்தையும் கேமரா கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்பகுதி முழுவதும் சம்மந்தப்பட்ட நபர்கள் தங்களுடைய கைரேகை பதிவுகளின் மூலம் அவர்தம் விவரம் சரிபார்க்கப்பட்டே அறைக்கதவுகள் திறக்கும் வண்ணம் நவீன பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தகவல்கள் அனைத்தும் நிரந்தரப் பதிவாக தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் கொண்டு வரப் பட்டுள்ளது.
தொகுதி 1 தேர்வுகள்
2017-ம் ஆண்டுக்கான தொகுதி-I க்கான முதன்மை எழுத்துத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டு டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியிட அனைத்து நடைவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டள்ளன. இனிவரும் காலங்களில் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 2 மாதங்களில் முதல்நிலைத் தேர்வும், 2 மாதங்களில் தேர்வு முடிவுகளும், 2 மாதங்களில் முதன்மை எழுத்துத் தேர்வும், 3 மாதங்களில் எழுத்துத் தேர்வு முடிவுகளும், 15 நாட்களில் நேர்முகத் தேர்வும் நடத்தி, 10 மாதங்களுக்குள் இறுதி முடிவுகள் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்களின் நலன் கருதி மேற்கூறிய பல்வேறு முன்முயற்சிகளை தேர்வாணையம் எடுத்து வருகிறது. தேர்வர்கள் தேர்வு குறித்து அவ்வப்போது தவறாக வரும் செய்திகளையோ வதந்திகளையோ இடைத் தரகர்களையோ நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு தேர்வாணையத்தை நேரிலோ, [email protected] மின்னஞசல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.