முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரமாமுனிவர் திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

வியாழக்கிழமை, 8 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,வீரமாமுனிவரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், அமைச்சர் பெருமக்கள், சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள வீரமாமுனிவரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அன்னாரின் திருவுருவப்படத்திற்கு நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அரசு விழாவாக...முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமையிலான அரசு, தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வீரமாமுனிவரின் பிறந்த தினமான நவம்பர் 8-ம் நாள்(நேற்று) ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

மலர்தூவி மரியாதை...அதன்படி, தமிழக அரசின் சார்பில், வீரமாமுனிவரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு நேற்று அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, பென்ஜமின், க.பாண்டியராஜன் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் பா.வளர்மதி,  அரசு உயர் அலுவலர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் பொ.சங்கர், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) உல.இரவீந்திரன், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து