முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நக்சல்களின் பிடியில் சிக்கி தவித்த சத்தீஷ்கரை பா.ஜ.க அரசு விடுவித்துள்ளது: அமித்ஷா

சனிக்கிழமை, 10 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

ராய்ப்பூர்,நக்சல்களின் பிடியில் இருந்து சத்தீஷ்கர் மாநிலத்தை ஏறக்குறைய பா.ஜ.க அரசு விடுவித்துள்ளது என அக்கட்சித் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

சத்தீஷ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. மாநிலத்தின தெற்கு பிராந்தியத்தில் உள்ள 18 தொகுதிகளுக்கு நாளை 12-ம் தேதியும், மீதமுள்ள தொகுதிகளுக்கு நவம்பர் 20 அன்றும் தேர்தல்கள் நடைபெறுகின்றன.இரு கட்டங்களிலும் நடைபெறும் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11 அன்று எண்ணப்படுகிறது. இதையொட்டி பல்வேறு கட்சித் தலைவர்களும் அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திஉள்ளிட்டோர் அங்கு பிரசாரம் செய்தனர்.பா.ஜ.க. தலைவர் அமித் ஷா நேற்று சத்தீஷ்கரில் வாக்கு சேகரித்தார். முன்னதாக ராய்ப்பூரில் கட்சியின் தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-முதல்வர் ரமண் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. 3 லட்சத்து 48 ஆயிரம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 7 லட்சம் ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. உயர்கல்வி, கிராமப்புற மின்சாரம் என பல திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. சிறிய மாநிலமான சத்தீஸ்கருக்கு பிரதமர் மோடி முன்னுரிமை கொடுத்து வருகிறார். மத்திய அரசு 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கியுள்ளது.நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ.க. நான்காவது முறையாக இங்கு ஆட்சி அமைக்கும். நக்சல்களின் பிடியில் சிக்கி தவித்த சத்தீஷ்கரை பா.ஜ.க அரசு விடுவித்துள்ளது. மாவோயிசத்தை ஆதரிப்பவர்களை சத்தீஷ்கர் மக்கள் புறக்கணிப்பார்கள். தற்போது அதிக அளவு சிமெண்ட் மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலமாக சத்தீஷ்கர் உருவெடுத்துள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து