முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்க கடல் பகுதியில் ' புயல் ':தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சனிக்கிழமை, 10 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் என்றும் இது மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து 14-ம் தேதி இரவு வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதியை நோக்கி நகரக்கூடும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு... நுங்கம்பாக்கத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், நேற்று முன்தினம் அந்தமான் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுவடைந்து மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து 14-ம் தேதி இரவு வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதியை நோக்கி நகரக்கூடும்.

கனமழை பெய்யும்....இதன் காரணமாக 14-ம் தேதி மாலையிலிருந்து வட கடலோரத் தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும். ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் நாளை 12-ம் தேதி இரவுக்குள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. நேற்று முன்தினம் குமரிக்கடல் மற்றும் இலங்கை, இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று சற்று வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இது மாலத்தீவு, குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவி வருகிறது. இதன்காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

எச்சரிக்கைக் கூண்டு...சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என புவியரசன் தெரிவித்தார். இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, நாகை, எண்ணூர், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, குலச்சல், ராமேஸ்வரம், கடலூர், புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து