முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 நிமிடத்தில் ரூ. 20,000 கோடி சம்பாதித்த அலிபாபா நிறுவனம்

ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்,சீனாவை சேர்ந்த அலிபாபா ஆன்லைன் வர்த்தக நிறுவனம் வெறும் ஐந்து நிமிடத்தில் ரூ.20 ஆயிரம் கோடியை சம்பாதித்து இருக்கிறது.

சீனாவில் உள்ள ஜாக் மாவின் அலிபாபா நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் முதல் இடம் வகிக்கிறது. மொத்தமாக உலக அளவில் அலிபாபா நிறுவனம் நம்பர் ஒன் நிறுவனமாகவும் உள்ளது. அலிபாபா நிறுவனத்தை தொடங்கிய ஜாக் மா, எல்லா வருடமும் 11-ம் தேதி 11-ம் மாதம் மிகப்பெரிய சலுகைகளை அறிவிப்பார். இந்த நிலையில் சீனாவில் நேற்றும் இந்த விற்பனை நிறைய சலுகைகளுடன், நிறைய தள்ளுபடிகளுடன் நடந்தது.இந்த நிலையில் நேற்று அதிகாலை அங்கு விற்பனை தொடங்கி ஐந்து நிமிடத்தில் வேகமாக பொருட்கள் விற்று தீர்ந்தது. சீனா முழுக்க பல கோடி மக்கள் பொருட்களை வாங்கி குவித்தனர். இதனால் அலிபாபா நிறுவனம் வெறும் ஐந்து நிமிடத்தில் ரூ.20 ஆயிரம் கோடியை சம்பாதித்துள்ளது. ஒரு மணி நேரம் வரை விற்பனை அசுர வேகத்தில் நடந்துள்ளது. ஒரு மணி நேர முடிவில் ரூபாய் 70 ஆயிரம் கோடிக்கு விற்பனை நடந்து உள்ளது. சென்ற வருடம் இதேநாளில் அலிபாபா நிறுவனம் 1.8 லட்சம் கோடி வரை வருமானம் ஈட்டியது. இந்த வருடம் அதைவிட பல மடங்கு வருமானம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதில் ஆப்பிள் நிறுவனமும், சியோனி நிறுவனமும் அதிக அளவில் பொருட்களை விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து