முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை அவரது திருவுருவப்படத்திற்கு கவர்னர் - துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்துகின்றனர்.

பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் பெருமக்கள், சென்னை, கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்திற்கு  நாளை காலை 10.00 மணிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தவுள்ளார்கள்.

அம்மா நல்லாசியுடன் செயல்படும் தமிழக அரசு, தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்த நாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 14-ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை, கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் அமைந்துள்ள பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்திற்கு நாளை (14.11.2018) காலை 10.00 மணியளவில் தமிழக கவர்னர், தமிழ்நாடு துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத்தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள்  மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து