முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயற்கை பேரிடர் காலத்தில் நிவாரணபணிகளை மேற்கொள்ள ரூ.4.86 கோடியில் நவீன இயந்திரங்கள் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயகுமார், ஆர்.பி.உதயகுமார் வழங்கினர்

செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,சென்னை மாநகராட்சியில் இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.4 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 336 நவீன இயந்திரங்களை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார்  ஆகியோர் வழங்கினர்.

சென்னை மாநகராட்சியில் இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை  மேற்கொள்வதற்காக ரூ.4 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டிலான மரஅறுவை  இயந்திரங்கள், ஹைட்ராலிக் மூலம் இயக்கப்படும் மரக்கிளைகளை நீக்கும்  இயந்திரங்கள், நீர் இறைக்கும் பம்புகள் மற்றும் ஜெனரெட்டர்கள் என கூடுதலாக 336  நவீன இயந்திரங்களை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார்,  ஆர்.பி.உதயகுமார் 15 மண்டலங்களுக்கு நேற்று வழங்கினர். சென்னை மாநகராட்சியில் பருவமழை காரணமாக ஏற்படுகின்ற பேரிடர் நிகழ்வுகளால் சாலைகளில் விழுகின்ற மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்திட தற்போது 171 எண்ணிக்கையிலான மரஅறுவை இயந்திரங்களும், பருவமழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் தேங்குகின்ற மழை வெள்ளநீரை உறிஞ்சி வெளியேற்றுவதற்கு தற்போது  அதிகதிறன் கொண்ட நீர் இறைக்கும் பம்புகள் 17 எண்ணிக்கையிலும் உள்ளன. பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாவண்ணம் பொதுமக்களின் நலனுக்காக வெள்ள நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள 5 எச்.பி. திறன் கொண்ட பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்கும் ரூ.59,000 மதிப்பிலான மரஅறுவை இயந்திரங்கள் கூடுதலாக 200 எண்ணிக்கையில் மொத்தம் ரூ.1,18,00,000 மதிப்பீட்டிலும், 25 எச்.பி. திறன் கொண்ட ரூ.4,94,764 மதிப்பிலான நீர் இறைக்கும் பம்புகள் கூடுதலாக 30 எண்ணிக்கையில் மொத்தம் ரூ.1,48,42,920 மதிப்பீட்டிலும்,

மேலும் 8 மீட்டர் உயரத்தில் உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணிக்காக நவீன வகையிலான ஹைட்ராலிக் மூலம் இயக்கப்படும் மரக்கிளைகளை நீக்கும் ரூ.19,98,000 மதிப்பிலான இயந்திரங்கள் 6 எண்ணிக்கையில் மொத்தம் ரூ.1,19,88,000 மதிப்பீட்டிலும், மழைக்காலங்களில் தெருவிளக்குகளை ஒளிரச் செய்வதற்காக 2 கே.வி.ஏ. திறன் கொண்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான ஜெனரேட்டர்கள் 100 எண்ணிக்கையில் மொத்தம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.4 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 336 நவீன இயந்திரங்கள் மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணியால் வழங்கப்பட்டது.

தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சியில் பெருமழை மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்கள் உயர் அலுவலர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொடர்புகொள்ள வேண்டிய அலுவலர்களின் கைபேசி மற்றும் அலுவலக எண்கள், அவசரகால தொடர்பு எண்கள், மேலும் தொடர்புடைய சேவைத்துறைகளான சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரியம், மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பேரிடர் மேலாண்மை, கப்பற்படை, கடலோர காவல் படை, விமானப்படை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், காவல்துறை, இந்திய வானிலை ஆய்வு மையம், வானொலி, இந்து அறநிலையத் துறை, வேளாண்மைத்துறை, தீயணைப்புத்துறை, போக்குவரத்துத்துறை, ஆவின், குடிசைமாற்று வாரியம், மீன்வளத்துறை, வனத்துறை, சுகாதாரத்துறை, தென்னக ரெயில்வே துறை, பி.எஸ்.என்.எல், மெட்ரோ ரெயில்வே துறை, ரெட் கிராஸ், புளூ கிராஸ் மற்றும் முன்னாள் இராணுவ வீரர்கள் நலத்துறை போன்ற துறைகளின் தொடர்பு எண்கள் மற்றும் முகவரி அடங்கிய மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் 2018 என்ற கையேட்டினை நேற்று அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் மற்றும் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து