முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் மிக உயர படேல் சிலையை 11 நாளில் 1.28 லட்சம் பேர் பார்த்தனர்

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் : சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேலுக்கு குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள சர்தார் சரோவர் அணைக்கு அருகில் 182 மீட்டர் உயர சிலை வைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக உயரமான இச்சிலைக்கு ‘ஒற்றுமையின் சிலை’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 31-ம் தேதி திறந்து வைத்தார்.

இந்நிலையில் சர்தார் சரோவர் நர்மதா நிகாம் நிறுவன கண்காணிப்பு பொறியாளர் ஆர்.ஜி.கனுங்கா  கூறுயபோது, “இந்தச் சிலையை பார்வையிட கடந்த   (நவ. 11) வரையிலான 11 நாட்களில் 1.28 லட்சத்தும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். கடந்த சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களில் மட்டும் முறையே 27,000 மற்றும் 24,000-க்கும் மேற்பட்டோர் வந்தனர்” என்றார்.

மாநில சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “இனிவரும் காலங்களில் பிற மாநில மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் இங்கு அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

ரூ.2,989 கோடியில் அமைக்கப்பட்ட இச்சிலை அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட 2 மடங்கு உயரம் கொண்டதாகும். சிலையின் உள்ளே 135 மீட்டர் உயரத்திலிருந்து ஒரே நேரத்தில் 200 பேர் வீதம் ஒரு நாளில் 5,000 பேர் பார்வையிட முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து