முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை: முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து

புதன்கிழமை, 14 நவம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது என்று பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பு

பாகிஸ்தானில் நடந்து வரும்  அரசு நிர்வாகம்  மோசமாக உள்ளதாக  முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி கருத்து தெரிவித்து உள்ளார். பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவை இல்லை,  அதனால்  4 மாகாணங்களை கூட கையாள முடியாது என கூறி உள்ளார். பாகிஸ்தானின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி காஷ்மீர் விவகாரத்தில் ஒரு கருத்து தெரிவித்து உள்ளார். லண்டனில் ஒரு  பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய, முன்னாள் பாகிஸ்தான் ஆல்  ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி பாகிஸ்தானுக்கு  காஷ்மீர் தேவையில்லை என்றும் காஷ்மீர் சுதந்திரம் பெற அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி  உள்ளார்.

மோசமான நிர்வாகம்

எனினும், பாகிஸ்தானில் ஒற்றுமை மற்றும் தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கும் முயற்சிகளில் தோல்வி அடைந்ததை ஒப்புக் கொண்டாலும், காஷ்மீரில் மக்கள் செத்து  கொண்டிருக்கிறார்கள் மற்றும் அப்பாவிகள் மரணம்  கவலையை  ஏற்படுத்துகிறது. அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மக்கள் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்பட வேண்டும்.பாகிஸ்தானில் மோசமான நிர்வாகம் நடக்கிறது. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை. அதனால்  நான்கு மாகாணங்களைக் கூட கையாள முடியாது. "காஷ்மீரை இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ கட்டுப்படுத்தக் கூடாது, மாறாக காஷ்மீர் ஒரு சுதந்திர நாடாக உருவாக அனுமதிக்கப்பட வேண்டும்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து