முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரண்வீர் சிங்- தீபிகா படுகோன் திருமணம் இத்தாலியில் நடந்தது

வியாழக்கிழமை, 15 நவம்பர் 2018      சினிமா
Image Unavailable

ரோம்,இந்தி திரையுலக நட்சத்திரங்கள் ரண்வீர் சிங்- தீபிகா படுகோன் திருமணம், இத்தாலியில்  சிறப்பாக நடைபெற்றது.இத்தாலியில் உள்ள லேக் கோமா நகரில் சொகுசு பங்களா ஒன்றில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு ஹிந்தி திரையுலகைச் சேர்ந்த ஷாரூக் கான், சஞ்சய் லீலா பன்சாலி, ஃபாரா கான் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

தீபிகா படுகோன் கொங்கனி சமூகத்தைச் சேர்ந்தவர். ரண்வீர் சிங், மும்பையைச் சேர்ந்த சிந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர். இதனால், ரண்வீர் சிங்- தீபிகா திருமணம் கொங்கனி முறைப்படி நடைபெற்றது.  திருமணத்துக்காக, ரண்வீர் சிங்கும், தீபிகா படுகோனும் கடந்த 10-ஆம் தேதி இத்தாலிக்கு புறப்பட்டுச் சென்றனர். திருமணம் முடிந்து, வரும் 18-ஆம் தேதி இவர்கள் இந்தியா திரும்புவார்கள் என்று தெரிகிறது. அதைத் தொடர்ந்து, பெங்களூரில் வரும் 21-ஆம் தேதியும், மும்பையில், வரும் 28-ஆம் தேதியும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் இவர்கள் விருந்தளிக்கிறார்கள்.ரண்வீர் சிங்கும், தீபிகா படுகோனும், ராம் லீலா, பத்மாவத், பாஜிராவ் மஸ்தானி ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து