எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம்,சேலம் மாவட்டம் மேச்சேரியில் நடைபெற்ற விழாவில் ரூபாய் 2 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை 825 பயனாளிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மேலும், ரூ.158 கோடி மதிப்பில் மேச்சேரி-நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.சேலம் மாவட்டம், மேச்சேரியில், ரூ. 158 கோடியில் மேச்சேரி - நங்கவள்ளி கூட்டுக் குடிநீர் திட்ட திறப்பு விழா நடைபெற்றது.
இத்திட்டத்தை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மேச்சேரி-நங்கவள்ளி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் 67 குடியிருப்புகளும், மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் 338 குடியிருப்புகளும், மேச்சேரி, பி.என்.பட்டி மற்றும் வீரக்கல்புதூர் ஆகிய மூன்று பேரூராட்சிகளிலும் என மொத்தம் 405 குடியிருப்புகளுக்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இருசக்கர மானியம்...ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 60 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கும், தூய்மை பார்வை இயக்கத்தின் சார்பில் 90 பயனாளிகளுக்கு தனி நபர் இல்ல கழிப்பறைகள் கட்டுவதற்கும் என மொத்தம் 150 பயனாளிகளுக்கு ரூபாய் 1,15,80,000 மானியத் தொகையும், மகளிர் திட்டம் சார்பில் 14 மகளிர் சுயஉதவிக் குழுவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோருக்கு பாதுகாப்பு நிதி உதவியும், ஒரு மகளிருக்கு அம்மா இருசக்கர வாகன மானியம் என 151 பயனாளிகளுக்கு ரூபாய் 3,75,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மானியத் தொகை...வருவாய்த் துறையின் சார்பில் 394 பயனாளிகளுக்கு ரூபாய் 19,79,600 மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை மற்றும் இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் நிலவரித் திட்டப் பட்டா உள்ளிட்டோர்களுக்கும், வேளாண்மைத் துறை சார்பில் 25 விவசாயிகளுக்கு ரூபாய் 2,46,800 மதிப்பீட்டில் தெளிப்பு நீர் பாசனக் கருவி, மழைத்தூவான் கருவி, விதைகள் மற்றும் வேளாண் கருவிகள், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் அமைப்பதற்கு ரூபாய் 15 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
20 விவசாயிகளுக்கு...தோட்டக்கலைத் துறையின் சார்பில் 20 விவசாயிகளுக்கு ரூ.18,10,200 மதிப்பீட்டில் சொட்டு நீர் பாசன நிலப் போர்வை, தெளி நீர் பாசனம், பசுமைக் குடில், வெங்காய சேமிப்புக் கிடங்கு அமைப்பதற்கான மானியம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் ரூ.ஒரு லட்சம் மதிப்பீட்டில் 10 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம், 10 பயனாளிகளுக்கு விலையில்லா சலவைப் பெட்டிகள், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் சுயநிதித் திட்ட 1 பயனாளிக்கு ரூபாய் 95 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.2 கோடியே 15 லட்சம்...பொதுச் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையின் சார்பில் மாணவர்களுக்கு ரூபாய் 2 ஆயிரம் மதிப்பீட்டில் கணிப்பொறி, கூட்டுறவுத் துறையின் சார்பில் 50 நபர்களுக்கு ரூபாய் 37,90,000 மதிப்பீட்டில் மாநில கடனுதவி மற்றும் பயிர்க் கடனுதவி, ஆதி திராவிடர் நலத் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் மதிப்பீட்டிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூபாய் 25,000 சுயஉதவி தொடங்குவதற்கான வங்கிக் கடன் மானியம் என மொத்தம் 825 பயனாளிகளுக்கு ரூபாய் 2,15,21,800 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.