முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோஹிங்கயாக்களுக்கு எதிரான மனித உரிமை மீறலுக்கு ஐ.நா. கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க்,சொந்த நாட்டிலேயே வேற்று நாட்டவரைப் போல நடத்தப்படும் ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 142 நாடுகள் வாக்களித்தன.

ஐ.நா. பொது சபையின் மனித உரிமைகள் குழுவில், இஸ்லாமிய நாடுகள் அடங்கிய அமைப்பின் சார்பாக இந்த தீர்மானம் முன்மொழியப்பட்டது. அத்துடன் ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மர் ராணுவம் நடத்திய வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் அடங்கிய அறிக்கையும் இணைக்கப்பட்டிருந்தது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட சபையில், 142 நாடுகள் ஆதரவாகவும், 10 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு எதிராகவும் வாக்களித்தன. இந்த வாக்கெடுப்பில் 26 நாடுகள் கலந்து கொள்ளவில்லை. 11 லட்சம் ரோஹிங்கயாக்களை அகதிகளாகக் கொண்டுள்ள வங்கதேசம் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது. மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடுகளான சீனா, கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. இந்நிலையில், அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்று மியான்மர் விமர்சித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து